இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டு முரண்பாடுகளைத் தொடர்ந்து, மூத்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்ட நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ITAK தலைமை
மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு அவர் ஆதரவளித்தது, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என ITAK தலைமை தெரிவித்துள்ளது.

அவர் பதவியிலிருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.
எனினும் இந்த முடிவுக்கு சிறீதரன் இதுவரை பதில் எதையும் வழங்கவில்லை என தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.













