Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான இழுத்தடிப்பு உத்தியா? | சுமந்திரன்

January 25, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன அவற்றுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டவரைவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியோ என சந்தேகிக்க தோன்றுவதாக தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன். அதுப்பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறு  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

அவ்வ இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்ட வரைவு தொடர்பில் ஏற்கெனவே தீவிர கரிசணையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்த எம். ஏ. சுமந்திரன், இச்சட்ட வரைவின் பிரகாரம் குறித்த ஒரு நபர் மீது பொலிஸார் சந்தேகம் கொள்ளும்பட்சத்தில் அவரது  சகல இலத்திரனியல் உபகரணங்களையும் பரிசீலிக்க முடியும் எனவும் இது மிகவும் ஆபத்தானதொரு போக்கு எனவும் சுட்டிக்காட்டினார்.

‘பொலிஸாரின் விசாரணைக்கு இது உதவியாக அமைந்தாலும் ஒருவரது சகல இலத்திரனியல் உபகரணங்களையும் ஆராய்வதற்கு இடமளிப்பது என்பது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பல்வேறு தொழில்புரிவோரின் தொலைபேசி,கணினி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களில் பல இரகசியத் தகவல்கள் இருக்கக்கூடும்.

அவ்வாறிருக்கையில் நீதிமன்றத்தின் ஊடாக  கட்டளை ஒன்றைப் பெற்று அவற்றை ஆராய்வது வேறு விடயம். ஆனால் அவ்வாறு அனுமதியின்றி தன்னிச்சையாக ஆராய்வது என்பது தனிமனித சுதந்திரத்தையும், சமூகத்தின் சுதந்திரத்தையும் பாதிப்பதாகவே அமையும்.’என அவர் கரிசணை வெளியிட்டார்.

அதேபோன்று முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன அவற்றுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையிலேயே இருக்கிறது எனத் தெரிவித்த சுமந்திரன், எனவே தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டவரைவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியோ என சந்தேகிக்க தோன்றுவதாக குறிப்பிட்டார்.

Previous Post

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

Next Post

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

Next Post
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures