Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

November 22, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (21.11.2025) ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவீரர்களின் உறவுகள்

இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

[DE4J2 ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.  

வவுனியா

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு வவுனியா மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11.2025) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.

தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2025 In Jaffna
தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2025 In Jaffna

செய்தி – கபில்

யாழ்ப்பாண பல்கலை

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகள்வுகள் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.

தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2025 In Jaffna

செய்தி – தீபன்

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்

தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது வருகிறது.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படவுள்ளது.

அந்த வகையிலே இன்று (21) காலை தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தினுடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2025 In Jaffna
தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2025 In Jaffna

செய்தி – தவசீலன்

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2025 In Jaffna
Previous Post

நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது

Next Post

யாழில் உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவனுக்கு பாம்புக் கடி

Next Post
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

யாழில் உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவனுக்கு பாம்புக் கடி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures