2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் காலம் நிறைவடையும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (05) வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

