Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் பகுதியிலுள்ள வீதியொன்றை திறக்க முடியாதென கைவிரித்தது அநுர அரசு

October 29, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

 வவுனியா, மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் அவை விரைவில் விடுவிக்கப்படும். மக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்படும் என தெரிவித்த அநுர அரசாங்கம் தற்போது மேற்குறித்த வீதியை திறக்க முடியாதென கைவிரித்துள்ளது.

சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி

நாடாளுமன்றத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழர் பகுதியிலுள்ள வீதியொன்றை திறக்க முடியாதென கைவிரித்தது அநுர அரசு | Anura Gover Refused To Open A Road In A Tamil Area

வவுனியாவில் உள்ள பொதுமக்களின் காணிகள், மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடம் உட்பட, சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர்

இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,

தமிழர் பகுதியிலுள்ள வீதியொன்றை திறக்க முடியாதென கைவிரித்தது அநுர அரசு | Anura Gover Refused To Open A Road In A Tamil Area

 நடைமுறையில் உள்ள பாதுகாப்புக் காரணங்களுக்காக , தற்போது மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியையோ, அதனை அண்டிய காணிகளையோ விடுவிப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 குறித்த வீதிக்குப் பதிலாக மாற்று வழிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருப்பதாகவும், அவர் கூறினார்.

அதற்கு, இந்த மாற்று வழிகள் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருத்தமானவை என்று மருத்துவர் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

ஆசிய இளையோர் விளையாட்டு விழா மல்யுத்த வெண்கலப் பதக்க போட்டியில் இலங்கையின் வினோத் டில்ஷான்

Next Post

மீண்டும் இயக்குநராகி இருக்கும் போஸ் வெங்கட்

Next Post
மீண்டும் இயக்குநராகி இருக்கும் போஸ் வெங்கட்

மீண்டும் இயக்குநராகி இருக்கும் போஸ் வெங்கட்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures