அநுராதபுரத்தில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மல்கஹவெல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரத்மல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஆவார்.
இவர் தனது வீட்டிற்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.