Friday, June 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பு

June 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு மேலும் 7 சாட்சியாளர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கு நேற்று வியாழக்கிழமை (19) கூடியது.

உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்கிய குழு கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் கூடியது.

அதற்கமைய, நேற்று சாட்சி வழங்கிய 7 சாட்சியாளர்கள் உள்ளிட்ட வாதி சார்பில் 28 சாட்சியாளர்கள் குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு வருகை தந்துள்ளதுடன், வாதி சார்பில் மேலும் 2 சாட்சியாளர்களிடம் ஜூன் 26 ஆம் திகதியின் பின்னர் சாட்சிகள் பெற்றுக்கொள்ளவதற்கு விசாரணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த 2 சாட்சியாளர்களும் உத்தியோகபூர்வ பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஜூன் 26 ஆம் திகதி மீண்டும் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணையில் பங்கெடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் குழுவில் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ். வீரவிக்ரமவின் இணக்கத்துடன், 26 ஆம் திகதிக்கு பின்னர் இந்த 2 சாட்சியாளர்களிடம் சாட்சிகளைப் பெறுவதற்கும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குழு முன்னிலையில் அழைப்பதற்கு விசாரணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

விசாரணைக்குழு நாளைய தினமும் தொடர்ந்தும் கூடுவதற்கு திட்டமிட்டிருந்தாலும், பிரதிவாதியின் வழக்கு விசாரணைக்கு தயாராக வேண்டி உள்ளதால் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ். வீரவிக்ரம 23 ஆம் திகதி வரை கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் அதற்கு விசாரணைக்குழு அனுமதி வழங்கியது.

அதற்கமைய, விசரணைக்குழு 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதுடன், அன்றைய தினம் முதல் 25 ஆம் திகதி புதன்கிழமை வரை ஒவ்வொருநாளும் மு.ப. 9.30 மணிக்கு, பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சார்பில் சாட்சியாளர்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளனர்.

அத்துடன், இந்த மூன்று தினங்களில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சார்பில் சாட்சியளிப்பதற்கு 15 சாட்சியாளர்கள் வருகை தரவுள்ளதாகவும் விசாரணைக்குழு அறிவித்தது. இந்த சாட்சிகளை அடுத்து 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு மீண்டும் கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Previous Post

வடக்கு காணி குறித்த வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்? | சுமந்திரன் 

Next Post

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘ பேய்க்கதை ‘ படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘ பேய்க்கதை ‘ படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு

June 20, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது!

June 20, 2025
தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் 

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பு

June 20, 2025
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

வடக்கு காணி குறித்த வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்? | சுமந்திரன் 

June 20, 2025

Recent News

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘ பேய்க்கதை ‘ படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘ பேய்க்கதை ‘ படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு

June 20, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது!

June 20, 2025
தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் 

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பு

June 20, 2025
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

வடக்கு காணி குறித்த வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்? | சுமந்திரன் 

June 20, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures