Monday, August 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

படை(த்) தலைவன்- திரைப்பட விமர்சனம்

June 14, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘இசை ஞானி’ இளையராஜா வெளியிட்ட நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த்தின் ‘படை தலைவன்’ பட பாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பு : வி ஜெ. கம்பைன்ஸ்

நடிகர்கள் :  சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த், ரிஷி ரித்விக், யூகி சேது, அருள் தாஸ், கருடா ராம், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்.

இயக்கம் : யு. அன்பு

மதிப்பீடு: 2 / 5

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘படை(த்) தலைவன்’. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் விஜயகாந்த் தோன்றியிருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் பொள்ளாச்சி எனும் பகுதியில் மண்பாண்ட தொழில் செய்யும் கஸ்தூரி ராஜாவின் மகன் வேலு( சண்முக பாண்டியன்) . இவர்கள் மண்பாண்ட தொழில் செய்வதுடன் ‘மணியன்’ என்ற பெயரிலான யானை ஒன்றையும் வளர்க்கிறார்கள். இதற்கு வேலு பாகனாகவும் இருக்கிறார். பருவநிலை பொய்த்துப் போனதால் நாளாந்த வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் அந்த குடும்பம் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக வசதியுள்ள உறவினர் ஒருவரிடம் கடன் வாங்குகிறது.

அந்த கடன் சுமை கழுத்தை நெரிக்க வேறு வழி இல்லாமல் தாங்கள் ஆசை ஆசையாய் பாசத்துடன் வளர்க்கும் யானையை சுப நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று வருவாய் ஈட்ட திட்டமிடுகிறார்கள். இதற்காக திரைப்படத் துறையில் இருக்கும் தயாரிப்பு நிர்வாகி ஒருவரை சந்தித்து உதவி கேட்கிறார்கள்.

அவர் அந்த யானையின் வரலாறை தெரிந்து கொண்டு, சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு, யானையை அவர்களிடம் இருந்து தந்திரமாக பிரித்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

இதே தருணத்தில் வட இந்தியாவில் அடர்ந்த வனப்பகுதியில் திலகன் ( கருடா ராம்) எனும் ஒரு உயிர் பலி கொடுக்கும் பூசாரி-  அந்த காட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அங்கு வாழும் மக்கள் தங்களுடைய வன தேவதை வணங்க முடியாமல் தவிக்கிறார்கள். அத்துடன் அந்த திலகனுக்கு அடிமையாகவும் அங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு விடிவு காலம் யார் மூலம் எப்படி கிடைக்கிறது? என்பதையும் இந்த கதையுடன் இணைத்து சொல்லி இருக்கிறார்கள்.

முதல் பாதியில் தமிழக கிராமத்தில் எளிய பின்னணியுடன் வாழும் குடும்பமும், அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக யானையும் காட்சிப்படுத்தப்படுவது புதிதாக ஏதோ ஒன்றை சொல்ல முயல்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பான காட்சி நகர்வுகளும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் யானை அந்த குடும்பத்தில் இருந்து சதி செய்யப்பட்டு, வட இந்தியாவிற்கு பலி கொடுப்பதற்காக கடத்தப்பட்ட பிறகு திரைக்கதை நம்பக தன்மையை இழந்து அப்பட்டமான கமர்சியல் அம்சங்களுக்கு தாவுகிறது. இங்குதான் ரசிகர்களுக்கு அமில சோதனை ஆரம்பமாகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக  ஒரு காட்சியில் தோன்றும் கேப்டன் விஜயகாந்த்தின் திரை தோற்றம் நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை. இருப்பினும் ரசிகர்கள் விஜயகாந்த் திரையில் தோன்றியதும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

கதையின் நாயகனான வேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முக பாண்டியன் சில இடங்களில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அத்துடன் அவரும் அவருடைய தந்தை போல் அதிரடி எக்சன் காட்சிகளில் அனாயாசமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார். 

உடல் மொழி – தோற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்திய சண்முக பாண்டியன் கதையையும்‌ துல்லியமாக தெரிவு செய்திருந்தால் பாரிய வெற்றி கிடைத்திருக்கும்.

இயக்குநர் கஸ்தூரிராஜா இந்த படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இவரைக் கடந்து திலகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருடா ராம் கவனிக்க வைக்கிறார்.‌

அடர்ந்த வனப்பகுதியின் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் – இயற்கையின் அழகியலை நேர்த்தியாக காட்சி படுத்தி காண்போரின் கண்களை குளிர்விக்கிறார். இதற்கு இசைஞானியின் பின்னணி இசையும் பல தருணங்களில் தாலாட்டுகிறது.

படை (த் ) தலைவன் –  ஒலிக்காத முரசு.

Previous Post

மட்டக்களப்பில் யானை – மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Next Post

எதிர்வரும் 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Next Post
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

எதிர்வரும் 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி | ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

August 4, 2025
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

August 4, 2025
மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

August 4, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சி.ஐ.டி.யில் முன்னிலை!

August 4, 2025

Recent News

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி | ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

August 4, 2025
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

August 4, 2025
மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

August 4, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சி.ஐ.டி.யில் முன்னிலை!

August 4, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures