பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அநுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் உள்ள சில பாடசாலைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மூடப்படும் என வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை பொசன் பௌர்ணமி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.