Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

எனது நாடாளுமன்ற உரைகளை நேரடியாக ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் விதிக்கப்பட்ட தடையானது நீதிக்கோட்பாட்டை மீறும் செயல் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், ”எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பாக எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி கையளித்த கடிதத்தினை நான் வாசிக்கின்றேன்.

எனது நாடாளுமன்ற உரைகளை நேரடியாக ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நான் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் சட்டத்தரணி தொடர்பாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக என்மீது குற்றஞ்சாட்டினார்.

ஆனால் நான் அது சம்பந்தமாக எதுவும் குறிப்பிடவில்லை. அத்துடன் நான் இலங்கை முஸ்லிம் மக்களை கூட தவறாக குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் தெளிவாக மறுத்துரைக்கின்றேன்.

நான் நாடாளுமன்றில் ஆற்றும் உரைகளை பொதுமக்கள் கேட்க வேண்டும். ஆனால் 8 நாட்களாக அதனை செவிமடுப்பதற்கு உரிமை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உங்களது அலுவலகம் விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால் எனது உரைகள் ஒளிபரப்பப்பட வேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியான 77 நாட்கள் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கின்றேன். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைவிட பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என்மீது விதிக்கப்பட்ட இந்த தடை நீதிக்கோட்பாட்டை மீறுவதாக அமைவதுடன்இது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அடக்குவதாக அமைகின்றது.” என தெரிவித்தார்.   

Previous Post

தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது – சிவஞானம்

Next Post

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

Next Post
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures