Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அநுர அரசின் சுற்றறிக்கையை மறந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!!

May 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றங்கள் | மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளில் நான்கு பேர் தற்போது தங்கள் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் தங்கள் கூடுதல் வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றை ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னதாக திருப்பித் தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

எழுத்துப்பூர்வ அறிவிப்பு

இந்த எழுத்துப்பூர்வ அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

அநுர அரசின் சுற்றறிக்கையை மறந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!! | Hand Over Additional Vehicles Of Former Presidents

அதன்படி, மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் V8 வாகனம் கடந்த 28 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன், மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய லெக்ஸஸ் டிஃபென்டர் ஏப்ரல் 24 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் ரோவர் ஜீப் ஏப்ரல் 23 ஆம் திகதி மற்றும் ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் பிராடோ ஏப்ரல் 28 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

ஜனாதிபதி செயலாளர் முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஒரு அமைச்சரவை அமைச்சர் பயன்படுத்தக்கூடிய அரசாங்க வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அநுர அரசின் சுற்றறிக்கையை மறந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!! | Hand Over Additional Vehicles Of Former Presidents

முன்னாள் ஜனாதிபதிகளும் அமைச்சரவை அமைச்சரைப் போலவே சலுகைகளுக்கு உரிமை பெற்றவர்கள் என்பதால், அவர்கள் வைத்திருக்கக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாக வரையறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கையின்படி ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றைத் திருப்பித் தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நடிகர் வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post

பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது – கெமுனு விஜேரத்ன

Next Post
பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது - கெமுனு விஜேரத்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures