Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மே மாதத்தில் ரசிகர்களை சந்திக்கும் ‘ படை தலைவன்’ நடிகர் சண்முக பாண்டியன் விஜய்காந்த்

April 29, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘இசை ஞானி’ இளையராஜா வெளியிட்ட நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த்தின் ‘படை தலைவன்’ பட பாடல்

நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘படை தலைவன்’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் யு. அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ படை தலைவன் ‘ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜய்காந்த், கஸ்தூரிராஜா, யாமினி சந்தர்,  முனீஸ்காந்த் , கருடன் ராம்,  ரிஷி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார்.  எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஜே கம்பைன்ஸ் – தாஸ் பிக்சர்ஸ் – ஓபன் தியேட்டர் – டைரக்டர்ஸ் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரசிகர்கள் மகிழும் வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌

இதன் காரணமாக கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் – அவருடைய கலை உலக வாரிசான ‘படை தலைவனை’ காண ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இதனால் இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் ஓரளவிற்கு வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

Previous Post

வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்

Next Post

அமெரிக்க துணை ஜனாதிபதியை பிரதமர் சந்தித்து வரி குறித்து பேசியிருக்கவேண்டும் | ரணில்

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

அமெரிக்க துணை ஜனாதிபதியை பிரதமர் சந்தித்து வரி குறித்து பேசியிருக்கவேண்டும் | ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures