Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் 

March 19, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் 

ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை  குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023.12.31 ஆம் திகதி  வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன், தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 பேரை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த்தியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை  அரசுடமையாக்குவது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை  முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்  இன்றைய தினம்  மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ஹோகந்தர பகுதியில் உள்ள  தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் சோதனையிட்ட போது   வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 795 மதுபான போத்தல்கள், 214 வைன் போத்தல்கள் உட்பட  1009 மதுபான போத்தல்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் இரண்டு ஆப்பிள்  வகையான ஸ்மார்ட் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றார்.

Previous Post

இயக்குநர் ஜெகன் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் தொடக்க விழா

Next Post

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

Next Post
நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின் மகிந்தவுக்கு நல்ல காலமாம் பதவிகள் கிடைக்குமாம்

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures