Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிறர் வலியை தன் வலியாக உணர்ந்த பேராளுமை இராஜநாயகம் அடிகளார்!

November 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிறர் வலியை தன் வலியாக உணர்ந்த பேராளுமை இராஜநாயகம் அடிகளார்!

’அகவொளி ராஜா’ நினைவு நூல் வெளியீட்டில் மேனாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன்

எங்கள் புலத்து .உளவியல் கல்வியை அறிமுகம் செய்த, உளவளத் துணையை மேம்படுத்திய முன்னோடிகளில் குறிப்பிடத் தக்கவராக பெருமை பேறும்அருட்தந்தை S.J இராஜநாயகம் அவ்ர்கள் ஓராண்டு நினைவுகளை மீட்டும் முகமாக கடந்த திங்கள் காலையில் அகவொளி நிலையத்தில்’அகவொளி ராஜா’ நினைவு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அகவொளி நிலைய இயக்குநர்தலைமையில் நிகழ்ந்த இவ்வைபவத்தின் பிரதம விருந்தினராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகை கலந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார் .

மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
பிறர் வலியை தன் வலியாக உணர்ந்த பேராளுமையாக இராஜ நாயகம் அடிகளாரின் பணி மேன்மைகளை தன் வெளியீட்டுரையில் விதந்து ரைத்த பேராசிரியர் , குடும்ப உளவியலின் முக்கியத்துவத்தினை அக வொளி குடும்ப நல நிலையத்தின் வழியாக எங்கள் பண்பாட்டில் நிலை நாட்டிய பெருமையும் அவரைச் சார்ந்து என்றால் மிகையில்லை. குடும்பம் ஒரு கோயில்; குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என கொண்டாகும் சமூகத்தில் சரியான புந்துணர்வின்மையினால் இன்று நிகழ்கின்ற உடைவுகள் ,பிரிவுகள் அதிகமாகும் .

இத்தகைய ஒரு நிலைமையை தீர்க்கதரிசனத் துடன் உணர்ந்த அருட்தந்தை S.J இராஜ நாயகம் அவர்கள் சொல்லும் செயலும்மிகப்பயனான விளைவுகளை எமதாக் கின.அவரோடு இணைந்து கற்பிக்கவும் கற்கவும் கிடைத்த பாக்கியம் பெரியது என்றார்.
மேலும் சமூகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பான தமிழில் சமூகவியல் சிறப்புக் கலையை ஆரம்பித்து கற்பிக்கும் பெரும் பேறு எனதான வேளை உளவியல்,சமூக உளவியல் கற்கை நெறிகளை வளப்படுத்தி கைகொ டுத்த அவர் பணி மறக்கமுடியாதது .

அந் நாட்களில் ’நான்’ சஞ்சிகையில் அனேகமாக எனது கட்டுரையும் அவ ரது கட்டுரையும் பக்கம் பக்கமாக பிரசுரமான நினைவுகளில் நெஞ்சு கனக்கின்றது ;அவர் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் சமூகத்தின் சிந்தனை விழிப்புக்கான கருவூலங்கள் என்றால் மிகையில்லை .

’ குடும்பவாழ்வில் இணங்கிப்போதல் ’ என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை; அதன் நிறைவுப்பகுதியைப் படித்ததும் அவரைத் தேடிப் பாராட்டிய நினைவுகள் இன்னமும் நெஞ்சிலே பசுமையாய் உள்ளது. யந்திரப் பாங்கான உளவியல் சிந்தனையாக அல்லாமல் பண்பாட்டு சூழமைவின் பிரதிபலிப்பானது அவர் தனித்துவம் .

’குடும்பவாழ்வில் இணங்கிப்போதல் என்பதன் பெயரால் ஆண்
ஆதிக்க சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணங்கிப்
போதல் வேண்டுமென்பது ஆரோக்கியமானதல்ல ;தவறானது . என தெளிவுற உரைத்தவர் இராஜநாயகம் அடிகளார்.

கட்டுரைகள்,காலப் பதிவுகளாகவும் கருத்து சிந்தனைக்களங்களாவும் அவர் எமக்களித்த நூல்களும் கவனத்துக்குரியன என்பேன்.சமூகத்தொடர்பாடல் .வன்முறை யற்ற தொடர்பாடல் அவரது சிறப்பு ஆர்வ- அனுபவப்பரப்பாக விளங்கி யமையும் குறிப்பிடத்தக்கது. சமூகத் தொடர்பியலின் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியஅடிகளாரின் வாழ்வியல் இலக்குகளை அவர் வழியில் வருங்கால சந்ததியினரிடம் தருதலே அவருக்கு உவப்பான அஞ்சலியாகும் என்றார்.

அகவொளி இயக்குனர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் ஜெயக்குமார் அடிகளார்,உள மருத்துவ நிபுணர் சிவதாஸ் ஆகியோர் அஞ்சலியுரை நிகழ்த்தினர் .

Previous Post

இசை ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சத்யராஜின் ‘ஜீப்ரா’ பட பாடல்

Next Post

11 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Next Post
பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

11 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி  –  செயலாளர் முரளிதரன்

இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி – செயலாளர் முரளிதரன்

June 23, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

June 23, 2026

Recent News

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி  –  செயலாளர் முரளிதரன்

இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி – செயலாளர் முரளிதரன்

June 23, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures