Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிலம்பரசனின் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

October 24, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகில் சிவாஜி- எம்ஜிஆர் ,  கமல்- ரஜினி, அஜித் – விஜய் ஆகிய வணிக கூட்டணியை தொடர்ந்து தனுஷ்  – சிலம்பரசன் கூட்டணி உருவானது. ஆனால் இந்த இரண்டு நடிகர்களுமே சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களுக்காக தங்களை தமிழ் திரையுலகின் வணிக கூட்டணி என்ற முத்திரையை விரும்பவில்லை. இதனால் இருவரும் தனித்தனியாகவே தங்களை நட்சத்திரங்களாக உயர்த்தி கொண்டார்கள். அந்த வகையில் சிலம்பரசன் நடிப்பில் தயாராகும் புதிய படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.  

‘ஓ மை கடவுளே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், படத்தின் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே சிலம்பரசன்-  அஸ்வத் மாரிமுத்து-  ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் ‘எஸ் டி ஆர் 49’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இதற்கு படக் குழுவினர் வெளியிட்டிருக்கும் பிரத்யேக புகைப்படங்கள் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தருமாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை

Next Post

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் இலங்கையர்கள் – விஜித ஹேரத்

Next Post
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் கடமைகளை பொறுப்பேற்றார்

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் இலங்கையர்கள் - விஜித ஹேரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures