Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சங்குக்கான ஆதரவு புதிய திசை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும் ; செல்வின் 

September 14, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சங்குக்கான ஆதரவு புதிய திசை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும் ; செல்வின் 

தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.  

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் கோயில் முன்றலில் இரா.மயூதரன் தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை (13)   இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

அபிவிருத்தி என்று எம்மை ஏமாற்றிவிட்டு எமக்கு எதிரான செயற்பாடுகளே இலங்கை அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயிலிட்டி துறைமுகம் அதற்கு சாட்சியாகும். 

மயிலிட்டியை சேர்ந்த மக்களின் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுகத்தை புனரமைத்து தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டபோதிலும் இதுவரை இந்த மண்ணுக்கு சொந்தமான மக்கள் தொழிலினை சீரான முறையில் மேற்கொள்வதற்கேற்ற அடிப்படை விடயங்கள் எவையும் செய்துதரப்படவில்லை.    

வெளிமாவ்ட்ட பலநாட் படகுகளும், பறிமுதல் செய்யப்படும் இந்திய இழுவைப் படகுகளுக்குமாகத்தான் இத்துறைமுகம் பயன்படுவருகிறது.  

கடல் மீது நாம் கொண்டிருக்கும் உரிமையை எம்மிடம் இருந்து பறித்தெடுக்கும் வகையிலேயே எமது கடற்றொழிலினை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  

அபிவிருத்தி என்ற போர்வையில் மயிலிட்டி மக்களாகிய நீங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டதை போன்றே தமிழர்களாக நாமும் ஏமாற்றப்படு வருகின்றோம். சிதறிப்போய் இருக்கும் நாம், தமிழர் தேசமாக ஒன்றிணையும் போதே இந்த அவலங்களுக்கு முடிவுகட்ட முடியும்.  

செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே நாம் அனைவரும் சென்று சங்கு சின்னத்துக்கு நேராக ஒரு புள்ளடியை மட்டும் இட்டு தமிழர் ஒற்றுமையை வெளிக்காட்டுவோம்.   

தென்னிலங்கை வேட்பாளர்களை இரண்டாம் மூன்றாம் தெரிவுகளாக கூட தமிழர்கள் சிந்திக்கவே முடியாது. ஆகவே எமது வாக்கினை சங்குக்கு மட்டுமே வாக்களிப்போம் என்றார். 

Previous Post

பிரித்தானியாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஊர்தி எழுச்சிப்பயணம்

Next Post

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் சந்துனுக்கு தங்கம்

Next Post
தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் சந்துனுக்கு தங்கம்

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் சந்துனுக்கு தங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures