Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அர்த்தமுள்ள குடியுரிமையையே கோருகிறோம் – ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா

September 8, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அர்த்தமுள்ள குடியுரிமையையே கோருகிறோம் – ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா

எம்மை இந்திய தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்ள். இலங்கையர்களாக எம்மை இன்றும் அங்கீகரிக்கவில்லை. அர்த்தமுள்ள குடியுரிமையை கோருகிறோம். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி ஜனாதியாகும் சூழல் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம் பெற்ற ‘ஜனாதிபதித்

வேட்பாளர்களுக்கிடையிலான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி ,பதில் வருமாறு,

கேள்வி–  நாணய நிதியத்தின் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை குறிப்பிடுங்கள் ?

பதில் -சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் பேசப்போவதில்லை. ஏனெனில் நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் நிறைவடைந்துவிட்டன.

அரசியலமைப்பு பற்றி தொடர்ச்சியாக பேசுகிறோம். மத்திய வங்கியின் யாப்பு பற்றி யாரும் அவதானம் செலுத்துவதில்லை.இந்த யாப்புக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது பற்றி சிந்தித்ததுண்டா, இதனை ஆராய்ந்து பார்த்தால் சர்வதேச நாணய நிதியம் குறித்து தீர்மானத்தை எடுக்கலாம். மத்திய வங்கியின் யாப்பில்  சர்வதேச நாணய நிதியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆகவே இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது எடுத்துள்ள தீர்மானங்களை தொடர வேண்டும் இருப்பினும் அது நிலையானதாக காணப்பட கூடாது. தேசிய பொருளாதாரத்துக்கு பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி – சுகாதாரம், நலன்புரி, கல்வி, பொது போக்குவரத்து, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு, ஆகிய அடிப்படை தேவைகளை சகல பிரஜைகளும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு  காணப்பட வேண்டும். நீங்கள்  ஆட்சிக்கு வந்தால் இந்த அடிப்படைத் தேவைகளை அனைவரும் நியாயமான வகையில் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கும் யதார்த்தமான  நடவடிக்கைகள் மூன்றை குறிப்பிட முடியுமா ?

பதில் – நான் லயன் அறையில் பிறந்தேன்.  லயன் அறையை ஜனாதிபதி தேர்தல் அலுவலகமாக மாற்றியமைத்து அங்கு தான் எனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டேன். எமது 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடந்த 200 வருடகாலமாக லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள். ஆனால் நாம் சமவுரிமை பற்றி பேசுகிறோம்.

பெருந்தோட்டப் பகுதியில் வாழ்பவர்களில் 40 சதவீதமானோருக்கு இன்றும் மலசலகூட வசதிகள் இல்லை என்று மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளில் பெருந்தோட்ட மக்களுக்கு இன்றும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கேள்வி –வங்குரோத்து நிலைக்கு ஊழல் மற்றும் அரச நிர்வாகத்தின் பலவீனம் பிரதான காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியன தொடர்பில் உங்களிடமுள்ள திட்டங்கள் என்ன ?

பதில் -அரச நிர்வாகம் டிஜிட்டல் மயப்படுத்தினால் ஊழல் மோசடிகளை குறைக்க முடியும். அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பாய்வு செய்தால் ஊழல் மோசடிகள் இடம்பெறாது.

2012 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் அபிவிருத்திக்கான முதலீடுகளில் 12  சதவீதமானவை மாத்திரமே அபிவிருத்தியடைந்துள்ளன. 88 சதவீத முதலீடுகளுக்கு நேர்ந்தது என்ன.

கேள்வி – 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன ?

பதில் – இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தமிழராக நான்  கலந்துக் கொண்டுள்ளேன்.எம்மை இந்திய தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்ள். இலங்கையர்களாக எம்மை இன்றும் அங்கீகரிக்கவில்லை. அர்த்தமுள்ள குடியுரிமையை கோருகிறோம்.இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி ஜனாதியாகும் சூழல் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.

Previous Post

அனுரவின் பின்னணியில் ரணில் | விமல் வீரவன்ச

Next Post

பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின் பாலித்த பண்டார 5ஆம் இடம்

Next Post
பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின் பாலித்த பண்டார 5ஆம் இடம்

பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின் பாலித்த பண்டார 5ஆம் இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures