Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு: அரியம் போட்டியில் இருந்து விலக வேண்டும் – சுமந்திரன்

September 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கே ஆதரவு: பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும்! மத்திய குழு தீர்மானம் இதுவே என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், பொதுவேட்பார் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (01.09) பல மணி நேரமாக வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய குழுக் கூட்டம் பல மணிநேரமாக இடம்பெற்றது. இதில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரிப்பதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், எமது கட்சி உறுப்பினராகிய அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 இல் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர். தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டு சஜித் பிரேமததாச அவர்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்னதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயறட்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

Previous Post

தமிழ்பொதுவேட்பாளரால் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பு | பெரமுன 

Next Post

தமிழ் மக்கள் விடுதலை அடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Next Post
தமிழ் மக்கள் விடுதலை அடைய  அனைவரும் ஒன்றுபட வேண்டும் | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்கள் விடுதலை அடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures