Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

August 7, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது | கனிமொழி கருத்து

புதுடெல்லி: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரான கனிமொழி எம்பி  தமிழக மீனவர்கள் பிரச்சினையை மக்களவையில் எழுப்பினார். அதில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து  மக்களவையில் கேள்வி நேரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி பேசியது: “இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றியது மட்டும் இல்லை. இந்த ஆண்டு மட்டுமே 27 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. சுமார் 177 இந்தியப் படகுகள் இப்போது இலங்கை அரசிடம் கைவசம் இருக்கின்றன. அந்தப் படகுகள் தேசியமயமாக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் படகுகள் அவர்களுடையதாக உரிமை எனக் கொண்டாடப்படுகின்றன.

அந்தப் படகுகள் இந்திய மீனவர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, படகுகள் விடுவிக்கப்படவில்லை. தூத்துக்குடி தருவைகுளத்தில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர், 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த அரசு இது குறித்து கவனத்தை எழுப்பிய பிறகும் இது நடந்திருக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்

Previous Post

FIFA உலகக் கிண்ணத்தை நடாத்த மும்முரமாக தயாராகிவரும் சவூதி

Next Post

கல்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோ தங்கம் கடற்படையினரால் மீட்பு!

Next Post
4 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

கல்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோ தங்கம் கடற்படையினரால் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures