Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து ஆராய்வது காலத்தை வீணடிக்கும் செயற்பாடு – ஜீ.எல்.பீரிஸ்

July 12, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

அரசியலமைப்பின்  83( ஆ) உறுப்புரை ஜனாதிபதியின் பதவி காலத்துக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தாது.ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என உயர்நீதிமன்றம்  வியாக்கியானம் வழங்கியுள்ள நிலையில்  பதவி காலம் குறித்து மீண்டும் சந்தேகத்தை தோற்றுவிப்பது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும் என  சுதந்திர மக்கள்  சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11)  இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதியின் பதவி காலம்  தொடர்பில்  உயர் நீதிமன்றம்  தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ள நிலையில்  மீண்டும் பதவி காலம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.பதவி காலம் ஐந்து ஆண்டுகளா ? அல்லது ஆறு ஆண்டுகளா ?   என்று மீண்டும் ஆராயப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வியாக்கியானம் கோரினார்.அவர் அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தத்துக்கு அமைய ஆறு வருட பதவி காலத்துக்காகவே மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்ற உறுதியாக தர்க்கம் காணப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் அவரது பதவி காலம் ஐந்து வருடங்கள் என்று குறிப்பிட்டது.

மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.இந்த திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் ஏற்பாடுகள் நாட்டின் அடிப்படை சட்டமாக கருதப்படும் ஆகவே அவரது பதவி காலம் 05 ஆண்டுகள் மாத்திரமே என்று உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியது.

ஜனாதிபதியின் பதவி காலம்  குறித்து கடந்த திங்கட்கிழமை  உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. சி.டி. லெனவக என்ற நபர் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து முறையான தெளிவின்மை காணப்படுவதால் ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்துமாறு வலியுறுத்தி அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசியலமைப்பின் 30 (2) உப பிரிவில் ஜனாதிபதியின்  பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 83(ஆ)பிரிவு ஜனாதிபதியின் பதவி காலத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தாது.இருப்பினும் இந்த உறுப்புரையை திருத்தம் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில்  அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது. இந்த வரைவு எதிர்வரும் 15 ஆம் திகதி  வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டால் எதிர்வரும் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை  உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த  14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை இந்த சட்டமூலம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.இந்த சட்டமூலம் தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் போது  ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்திருக்கும்.ஆகவே இந்த சட்டமூலம் காலத்தை வீணடிக்கும் ஒரு செயற்பாடு என்றார்.

Previous Post

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு விரைவில் பணப்பரிசு

Next Post

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட ‘வீராயி மக்கள்’ படத்தின் சிங்கிள் ட்ராக்

Next Post
இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட ‘வீராயி மக்கள்’ படத்தின் சிங்கிள் ட்ராக்

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி மக்கள்' படத்தின் சிங்கிள் ட்ராக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures