Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு

April 23, 2024
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு

நடிகர் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘கண்மணி பாப்பா’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் தமன் குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, கஜராஜ், ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வைட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

ஏப்ரல் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பட குழுவினருடன் நடிகர் ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் மணிவர்மன் பேசுகையில், ” எல்லோருடைய வாழ்விலும் மறக்க முடியாத ‘ஒரு நொடி: இடம்பெறும் அது எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெறும் சம்பவம் தான் இப்படத்தின் கதை. இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், ‘வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது’ என பாராட்டினர். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

தமிழ் சினிமாவில் சிறிய முதலீட்டில் வெளியாகும் தரமான படைப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ படத்திற்கும் பாரிய வரவேற்பு கிடைக்கும் என திரையுலகினர் அவதானிக்கிறார்கள்.‌

Previous Post

ஆரம்பிக்கப்பட்டது “ஸ்ரீ ராமாயண பாதை” யாத்திரை

Next Post

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தக நாள் ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா

Next Post
அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்கள்

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தக நாள் ! - ஐங்கரன் விக்கினேஸ்வரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures