Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு நீதிமன்றம் தண்டப் பணம் விதிப்பு

November 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மற்றும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் இருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா கடத்திய ஒருவரையும் அதற்கு உடந்தையாக இருந்த மேலும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். 

அதனை தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு வந்துள்ளது.

இந்த இருவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன. மேற்படி வழக்கானது புதன்கிழமை (22) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. 

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.M சஹாப்தீன் முன்னிலையில் இவ்வழக்கானது தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கைதான இருவருக்கும் முன்குற்றங்கள் எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொண்டதுடன் குறித்த குற்றச்சாட்டுகளுக்குரிய அதிகபட்ச தண்டனையாக முதலாம் எதிரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனையும், இரண்டாவது எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் தலா ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸாரால் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை பறிமுதல் செய்யுமாறும் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது

Previous Post

இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் | மிகவிரைவில் சாத்தியமாகலாம் என ஹமாஸ் தெரிவிப்பு

Next Post

மாவீரர் வாரத்தின் புனிதம் போணுவது நம் கடமை – கிருபா பிள்ளை

Next Post
ஆப்கானிஸ்தானை ஈழத்துடன் ஒப்பிட முடியுமா? | கிருபா பிள்ளை பக்கம்

மாவீரர் வாரத்தின் புனிதம் போணுவது நம் கடமை - கிருபா பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures