Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த எனது கேள்விப் பத்திரங்களை திருடினார் | சஜித்

November 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ்,எதிர்க்கட்சித் தலைவராகிய தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது,ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவில் வந்து கேள்வி கேட்பதற்கு இடையூறு விளைவித்தனர் என்றும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தன்னிடம் இருந்த சகல கேள்விப் பத்திர ஆவணங்களையும் பறித்துக்கொண்டார் என்றும், அந்த கேள்விப் பத்திர ஆவணங்களில் பல முக்கிய பத்திரங்கள் இருப்பதால்,அந்த பத்திரங்கள் இல்லாமல் தனது மேற்கொண்ட அலுவல்களை ஆற்ற முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சபாநாயகர் முன்னிலையிலையே பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த குறித்த கேள்விப் பத்திர ஆவணங்களை திருட முற்பட்டதையடுத்து இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,இச்செயற்பாடு காரணமாக எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை படைக்கலசேவிதரிடம் கிடைக்கப்பெற்றுள்ள பத்திரங்களில் பல முக்கிய பத்திரங்கள் தொலைந்து போயுள்ளன என்றும், இந்த திருட்டில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமரவிக்ரமவும் பங்கெடுத்துள்ளார் என்றும், இது தொடர்பில் சபாநாயகர் கூட பொறுப்புக் கூற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, ஆளும் கட்சியின் கள்ளக் கூட்டம் போலவே நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களின் பிறந்த தின கேக்கை சாப்பிட தான் செல்லவில்லை என்றும்,இவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும்,காணாமல் போன பத்திரங்கள் அனைத்தையும் மீள வழங்க வேண்டும் என்றும், இச்சம்பவத்தை நளின் பண்டார எம் பி காணொளியாக எடுத்ததால்,அது குறித்த சம்பவத்திற்கு ஆதாரமாக உள்ளதாகவும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் வீசப்பட்ட சம்பவங்கள் கூட வீடியோ பதிவு மூலம்தான் தெரிய வந்துள்ளதாகவும், எனவே,எந்த நபரின் நடத்தைக்கும் தான் அஞ்சப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Previous Post

வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு

Next Post

இளைய சகோதரனை கொலை செய்ய கப்பம் | மூத்த சகோதரனும் தந்தையும் கைது!

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

இளைய சகோதரனை கொலை செய்ய கப்பம் | மூத்த சகோதரனும் தந்தையும் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures