Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய சீனிக்கான வரியை குறைத்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பந்துல

November 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே அவசியம்

சீனிக்கான வரியை குறைத்தால் தேநீர், பாண், பணிஸ் உட்பட வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனிக்கான வரிச்சலுகை வழங்கினார்.

பொருளாதார பாதிப்புக்கு ஆட்சியில் இருந்த அனைவரும் களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும் என போக்குவரத்து,ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ ஆகியோர் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை.

நிதியமைச்சின் அதிகாரிகள்,மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோர் தான் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு ஒரு தரப்பினர் மாத்திரம் பொறுப்புக் கூற வேண்டும்,மன்னிப்பு கோர வேண்டும் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார பாதிப்பை அரசியல் நோக்கத்துடன் ஆராய முடியாது. 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைவரும் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும்.களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும்.

ஒரு சில அரச அதிகாரிகள் வழங்கிய தவறான ஆலோசனைகளால் முழு அரசியல் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜபக்ஷவிடம் ஒரு தரப்பினர் சீனிக்கான வரிச்சலுகை வழங்குமாறு கோரினார்கள்.

அவர் இவ்விடயம் தொடர்பில் துறைசார் நிபுணர்களிடம் வினவினார் அப்போது அவர்கள் ‘ சீனிக்கான வரிச்சலுகை வழங்கினால் தேநீர்,பாண்,பணிஸ்,உட்பட வெதுப்பக உணவுகளின் விலை குறைவடையும் ‘ என்றார்கள். இதன் பின்னர் கோட்டபய ராஜபக்ஷ வரிச்சலுகை வழங்கினார்.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப்படும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர 12 ஆண்டுகள் திறைசேரியின் செயலாளராகவும், 12 ஆண்டுகள் மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஆட்சிக்கு வரும் சகல தலைவர்களையும் இவர் வசியம் செய்து வசப்படுத்தியிருந்தார். அவரது ஆலோசனைக்கு அப்பாற்பட்டு எவராலும் செயற்பட முடியாத நிலையே காணப்பட்டது என்றார்.

Previous Post

தனிச் சிங்களச் சட்டத்தால் இலங்கையில் ஏற்பட்ட பாரிய விளைவு: அமைச்சரின் அறிவுறுத்தல்

Next Post

பாம்பு தீண்டி யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Next Post
பாம்பு தீண்டி யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பாம்பு தீண்டி யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures