Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ஜனாதிபதி ரணிலுக்கு உள்ளது – சந்திரிக்கா

September 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றங்கள் | மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே  தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். 

அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை.  அவர் மாறியுள்ளார். 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. 

இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்த பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டும். எனது வாழ்வில் இந்த பிரச்சினைக்காக பாரியளவில் அர்பணித்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் என்னை கொலை செய்தும் இருப்பார்கள்.

அரசியலமைப்பின் சட்டமாக காணப்படும் 13 ஆம் திருத்தத்தை  நடைமுறைப்படுத்துமாறே தற்போது ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். இருப்பினும் இதனை ஒரு புறம் தள்ளி வைத்துள்ளனர். அதனை ஏன்  செயல்படுத்த முடியாது?

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் சில விடயங்கள் உள்ளன. அதனை நடைமுறைப்படுத்த விரும்புவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் என்னிடமும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு எந்த ஒரு ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நான் தயார் என கூறினேன். எனினும் அதனை தற்போது யார் நடைமுறைப்படுத்துவது? அனைத்து மாகாண சபைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

13 ஆம்  திருத்தத்தை நடைமுறைப்படுத்த வடக்கு, கிழக்கில் குறைந்தது மாகாண சபைகளாவது இருக்க வேண்டும்.அதற்கு முதலில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். அதனை ஏன் நடத்த முடியாது?

வடக்கு, கிழக்கில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் ஏனைய பகுதிகளிலும் சத்திமிடுவார்கள்.13 ஆம் திருத்ததை நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய நிலைமை போன்று இலகுவான சந்தர்ப்பம் இருக்காது.

படிப்படியாக வந்து நான் செய்ய முற்பட்டது சரியானது என தற்போது மக்களுக்கு புரிந்துள்ளது. இதற்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்தேன். இனப்பிரச்சனைக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய தீர்வு அது என முழு உலகமும் கூறுகிறது.2/3 பெரும்பான்மையை பெற 7 வாக்குகளே அன்று போதாமல் போனது. 

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அந்த 7 வாக்குகளை வழங்க வில்லை. நான் அதனை பலவந்தமாக கொண்டு வரவில்லை. 

அவர்களுடன் 5 மாதங்கள் கலந்துரையாடியே கொண்டு வந்தேன்.கலந்துரையாடி இணங்கியே பிரதியை கொண்டு வந்தேன். அதற்கு வாக்களிக்கவில்லை. 

அது மாத்திரமல்ல எனக்கு கூச்சலிட்டு, அதனை தீயிட்டு கொளுத்தினர். தற்போதாவது அதனை நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை. அவர் மாறியுள்ளார். இது சிறந்த விடயம்.

போராட்டத்தினால் பாரிய மாற்றம் ஏற்பட்டது. தொலைக்காட்சிகளில் அதனை பார்த்து நான் அழுதேன். அந்த இளைஞர், யுவதிகள் யாருமே கூறாமலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மத மக்களும் ஒன்றிணைந்து போராடினார்கள்.

அங்கு ஒன்றாக சாப்பிடும் விதம், ஒருபோதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் சமய தலைவர்கள், தேரர்கள் மற்றும் ஏனைய மத தலைவர்களை இணைத்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து நோன்பு திறந்தனர். இது மிகப்பெரிய மாற்றமாகும். 

இதுவே தற்போது சிறந்த சந்தர்ப்பம். நானாக இருந்தால் மறுநாளே அதனை செய்திருப்பேன்.13 அல்ல அதற்கு அப்பால் சென்று தீர்மானம் எடுத்திருப்பேன். 

தற்போது அதனை செயற்படுத்த முடியும்.

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது.

சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் பிரதானி என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கத்தின் ஏனைய அங்கத்தவர்களும் இதனை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பிரிவுகளுக்கு கூற வேண்டும். அதிகாரிகளுக்கு கூற வேண்டும். அது சரியாக நடைமுறைப்படுத்தபடுகிறாதா என்பதை பின்னர் அவதானிக்க வேண்டும். அதனை செயல்படுத்த மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றார்.

Previous Post

உலகளாவிய வளர்ச்சி சவால்களை எதிர்கொள்வது குறித்து அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி

Next Post

வடக்கு, கிழக்கில் தொடரும் தீவிர பௌத்தமயமாக்கல் இனங்களுக்கிடையிலான வன்முறையாகலாம் | 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்  எச்சரிக்கை

Next Post
வடக்கு, கிழக்கில் தொடரும் தீவிர பௌத்தமயமாக்கல் இனங்களுக்கிடையிலான வன்முறையாகலாம் | 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்  எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் தொடரும் தீவிர பௌத்தமயமாக்கல் இனங்களுக்கிடையிலான வன்முறையாகலாம் | 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்  எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures