Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

30 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

May 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தடையற்ற மின்விநியோகம் இடம்பெற வேண்டுமெனில் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது | காஞ்சன

செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல்  அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீற்றராகவும், ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றாராகவும், கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீற்றராகவும், பஸ்களுக்கு வாரத்திற்கு எரிபொருள் கோட்டா 125 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவிக்கையில், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம்.

இருப்பினும் குறித்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வெளிநாட்டு கையிருப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தவில்லை. இதனை மேலும் அதிகரிக்க முடியுமா? என ஆராயுமாறு ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைவாக, அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்றார். இந்நிலையில் அமைச்சரினால் தற்போது எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உரிய திருத்தம் அமுலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வாரத்திற்கு 22 லீற்றராகவும்,

ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றராகவும் விநியோகிக்கப்படும். மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. கார்களுக்கு வாரத்திற்கு 40 லீற்றரும், பேருந்துகளுக்கு வாரத்திற்கு 125 லீற்றர்  எரிபொருளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post

கடுமையான வீழ்ச்சியை சந்திக்கப் போகும் இலங்கை ரூபாயின் பெறுமதி! அபாய நிலை குறித்து அறிவிப்பு

Next Post

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures