துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரமாகிறது.
அந்த வகையில் இருநாடுகளிலும் பூகம்பத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி பூகம்பத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.