துருக்கி சிரியாவில் பூகம்பத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உயிர்தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் திறந்தவெளியில் மோசமான நிலைகளில் காணப்படுகின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களிற்கு உணவு எரிபொருள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது பேரழிவின் பின்னர் இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் உள்ளோம் முதல் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் காரணமாக மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.