Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போராடி வீழ்ந்தது இந்தியா: தொடரை தக்க வைத்துக் கொண்ட நியூசிலாந்து

October 27, 2016
in News, Sports
0
போராடி வீழ்ந்தது இந்தியா: தொடரை தக்க வைத்துக் கொண்ட நியூசிலாந்து

போராடி வீழ்ந்தது இந்தியா: தொடரை தக்க வைத்துக் கொண்ட நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய குப்தில், லாதம் (39) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

குப்தில் நிதானமாக விளையாடி 84 பந்தில் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அணித்தலைவர் வில்லியம்சன் (41), ரோஸ் டெய்லர் (35) ஆகியோரும் ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் பின் வரிசை வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க ஆரம்பித்தனர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 260 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ், குல்கரனி, பாண்ட்யா, அக்சர் படேல் ஆகியோர் ஒரு விக்கெட்டும், மிஸ்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

போராடி வீழ்ந்தது இந்தியா

இதனையடுத்து 261 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ரோஹித் சர்மா (11) ஏமாற்றினார்.

இதன் பின்னர் ரஹானே, கோஹ்லி ஜோடி சிறப்பாக ஆடியது. கோஹ்லி 45 ஓட்டங்களிலும், ரஹானே (57) அரைசதம் அடித்தும் ஆட்டமிழந்தனர்.

கடந்த போட்டியில் மிரட்டிய டோனி 11 ஓட்டங்களில் வெளியேறினார்.

மணீஷ் பாண்டே (12), கெடார் ஜாதவ் (0), பாண்ட்யா (9), மிஸ்ரா (14) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர்.

அக்சர் படேல் மறுமுனையில் அதிரடியாக ஆடி 38 ஓட்டங்கள் எடுத்தார். குல்கரனியும் (25) கடைசியில் போராடினார்.

இருப்பினும் இந்திய அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில், சவுத்தி 3 விக்கெட்டுகளையும், பவுல்ட், நீஸாம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

Previous Post

சொந்த மண்ணில் விழிபிதுங்கிய இலங்கை: மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய வெற்றி

Next Post

டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை: அதிருப்தியில் பணியாளர்கள்!

Next Post
டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை: அதிருப்தியில் பணியாளர்கள்!

டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை: அதிருப்தியில் பணியாளர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures