Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் கொலை செய்யப்பட்டாரா ? விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு

February 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் கொலை செய்யப்பட்டாரா ? விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு

தலங்கம – பெலவத்த பிரதேசத்தில் 3 மாடி வீடொன்றில் நீச்சல் தடகத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ள வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வர்த்தகரின் கார் வெள்ளிக்கிழமை (03) நீர்கொழும்பிலுள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றுக்கு அருகில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் ,

பெலவத்தை எம்.டி.எச். பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள மீள் புதுப்பிக்கப்பட்டு வரும் வீடொன்றில் நீச்சல் தடாகத்தில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக நேற்று (02)பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு , விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி அவரது வர்த்தக நிலையத்திற்குச் சென்று இந்த வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.

30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த நபர் வீட்டுக்கு வருகை தராமையால் அவரது சகோதரி அது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். அதற்கமைய வெல்லம்பிட்டி பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அவர் கடந்த 30 ஆம் திகதி காரில் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , குறித்த வீட்டுக்கு அருகில் கார் காணப்படவில்லை.

அத்தோடு அவரது கையடக்க தொலைபேசி மற்றும் பணப்பை (பர்ஸ்) அங்கு காணப்படவில்லை. இது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைளை முன்னெடுத்து வருகின்றனர். சி.சி.ரி.வி. காணொளி பதிவுகள் எவையும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 49 வயதுடைய வெல்லம்பிட்டி – கித்தம்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்தோடு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வர்த்தகரின் கார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் , நேற்றைய தினம் நீர்கொழும்பு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

13ஆவது திருத்தம் முழுமை பெற ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்: விமல் சபதம்

Next Post

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா தேசிய பூங்கா | இவ்வருட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.50 இலட்சத்தை எட்டலாம்!

Next Post
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா தேசிய பூங்கா | இவ்வருட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.50 இலட்சத்தை எட்டலாம்!

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா தேசிய பூங்கா | இவ்வருட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.50 இலட்சத்தை எட்டலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures