Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 கோடி ரூபா செலுத்தக் கூடிய இயலுமை எனக்கில்லை | நாட்டு மக்களிடமிருந்தே பணத்தை சேகரிக்கவுள்ளேன் – மைத்திரி

January 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

நீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதன் மூலம் நஷ்டஈட்டினை செலுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) வியாழக்கிழமை சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நான் முன்னரே அறிந்திருக்கவில்லை என்பதை ஆரம்பம் முதலே தெரிவித்து வந்தேன். எனினும் ஊடகங்களும் மக்களும் அதனை நம்பவில்லை. தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் நான் வெளிநாடு செல்ல ஆயத்தமான போது கூட, என்னுடனிருந்த பொலிஸ்மா அதிபரால் இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. இவ்விடயமும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

என்னால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளினால் இழைக்கப்பட்ட தவறுக்காக நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன் என்பதே இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது என்னை சிறையிலடைக்க வேண்டும் எனக் கூறும் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரது காலத்தில் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தம்மையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு என்னை சிறையிலடைக்குமாறு கூறுவதற்கு அதிகாரமில்லை. தற்போதுள்ள மற்றும் இனிவரப் போகும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் இதன் மூலம் சிறந்த படிப்பினையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. சுமார் 30 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுகின்ற போதிலும், எனக்கு சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதனையே நான் நஷ்டஈடாக செலுத்த தீர்மானித்துள்ளேன்.

Previous Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதை மஹிந்தவால் மறுக்க முடியுமா | சஜித்

Next Post
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதை மஹிந்தவால் மறுக்க முடியுமா | சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures