Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானம் திசை திருப்பப்பட்டு, ஈரானிய கால்பந்து நட்சத்திரத்தின் குடும்பத்தினர் இறக்கப்பட்டனர்

December 28, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
விமானம் திசை திருப்பப்பட்டு, ஈரானிய கால்பந்து நட்சத்திரத்தின் குடும்பத்தினர் இறக்கப்பட்டனர்

தனது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு, அக்குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர் என ஈரானின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் அலி தாயி திங்கட்கிழமை (26) தெரிவித்துள்ளார்.

53 வயதான அலி தாயி, ஈரானின் பெரும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஆவார். சர்வதேச போட்டிகளில் அவர் 109 கோல்களை புகுத்தினார். இது நீண்டகாலமாக உலக சாதனையாக இருந்தது. பின்னர் கிறிஸ்டியானொ ரொனால்டோவினால் அச்சாதனை முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் அலி தாயி பங்குபற்றிய ஈரானிய அணி, அமெரிக்காவை வென்றது.

மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தான் ஆதரித்ததால், ஈரானிய அதிகாரிகளால் தான் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அலி தாயி கூறுகிறார்.

அலி தாயியின் மனைவியும், மகளும் தெஹ்ரானின் இமாம் கொமேய்னி விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட மாஹன் எயார் பிளைட் விமானத்தில் பயணம் செய்தனர் என ஐ.எஸ்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஆனால், அவ்விமானம் திசைதிருப்பப்பட்டு, ஈரானின் கிஷ் தீவிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அலி தாயியின் மனைவியும் மகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.எஸ்.என்.ஏ. விடம் அலி தாயி கூறுகையில், எமது மகளும் மனைவியும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை.

ஆவர்கள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டால், கடவுச்சீட்டு பொலிஸ் முறைமை அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இது தொடர்பாக எவரும் எனக்கு பதிலளிக்ககைவில்லை. இவ்விடயங்களுக்கான காரணம் தெரியவில்லை.

அவர்கள் ஒரு பயங்கரவாதியை கைது செய்ய விரும்பினார்களா? எனது மனைவியும் மகளும் துபாய் சென்று சில நாட்களின் பின் வரவிருந்தனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டிலிருந்து ஈரானுக்கு அலி தாயி திரும்பிய பின்னர் அவரின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் சில நாட்களின் பின்னர் அது மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

தெஹ்ரானிலுள்ள அவரின் தனது ஆபரண விற்பனை நிலையம் மற்றும் உணவகம் ஆகியன கடந்த டிசெம்பர் மாதம் சீல் வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அதிகாரிகளின் ஒடுக்குமுறை காரணமாக, தான் கத்தார் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு செல்லவில்லை என அலி தாயி தெரிவித்துள்ளார்.

Previous Post

ரோகிங்யா அகதிகளுடன் பயணித்த படகு காணாமல்போயுள்ளது | 180 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Next Post

பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்

Next Post
பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்

பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures