Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூராட்சி மன்ற தேர்தல் | வேட்புமனுக்களுக்கான திகதி வெளியிடும் வர்த்தமானி விரைவில்

December 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான அறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி குறிப்பிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட இருக்கின்றது. 

வேட்புமனுக்களை  ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் அலுவலகங்களில் இடம்பெற இருக்கின்றது.

இதேவேளை, வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை கடந்த 23ஆம் திகதி கொழும்பில் இருக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைத்து, இதுதொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்தில் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற இருக்கும் திகதி அறிவிக்கப்பட இருக்கின்றது.

அதன் பிரகாரம், வாக்களிப்பு தினம் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பத்தில் இடம்பெற பெரும்பாலும் இடமிருப்பதாக தேர்தல் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

Previous Post

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரைவில் பேச்சு | திஸ்ஸ விதாரன

Next Post

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

Next Post
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures