படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி, வட்டமடு, பனிச்சங்குளம், குரங்குபாஞ்சான் உட்பட பல பகுதிகளிலும் தற்போது சோளக்கதிர் அறுவடை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு வகை படைப்புழு இனத்தின் தாக்கம் அதிகரிப்பதால் விளைச்சல் குறைந்து காணப்படுவதாகவும், இதனால் பாரிய நஷ்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் சோளப் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பல இலட்சம் ரூபா செலவு செய்து, சோளச் செய்கை மேற்கொண்டிருந்த போதும், உரிய விளைச்சல் கிடைக்காமல் இருப்பதற்கு பசளை தட்டுப்பாடு, படைப்புழுவின் தாக்கம் போன்றனவே காரணம் எனவும் கூறுகின்றனர்.

