Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆப்கானில் சீன ஹோட்டல் மீது தாக்குதல் | ஐ.எஸ். பொறுப்பேற்பு

December 15, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
ஆப்கானில் சீன ஹோட்டல் மீது தாக்குதல் | ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள சீனா ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை (டிச.12) தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளை அமைப்பான ஐ.எஸ்-கோரசான் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீன அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தங்கும் ‘காபூல் லாங்கன்’ என்ற ஹோட்டல் உள்ளது.

இந்த ஹோட்டலில் கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட 3 கிளர்ச்சியாளர்கள் அரசுப் படையால் கொல்லப்பட்டதாகவும் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக பால்கனியில் இருந்து குதித்த 2 வெளிநாட்டவர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு கூறியது.

இந்த தாக்குதலால் கடும் அதிர்ச்சியடைந்ததாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று பெய்ஜிங்கில் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார். “இதுகுறித்து ஆப்கன் அரசிடம் அங்குள்ள சீன தூதரக அதிகாரிகள் தீவிரமாக எடுத்துரைத்தனர். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஆப்கன் அரசுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் கிளை அமைப்பான ஐஎஸ்-கோரசான் பொறுப்பேற்றுள்ளது.

இந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆப்கனில் தலிபான் அரசுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன் இம்மாத தொடக்கத்தில் ஆப்கனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பரில் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தூதரக மூத்த அதிகாரி, பாதுகாவலர் ஒருவர் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கனில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஒன்றாக ஐஎஸ்-கோரசான் உள்ளது. ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே அங்கு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய சித்தாந்தத்தை இன்னும் கடுமையாக செயல்படுத்துவது மற்றும் அந்தப் பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த அமைப்பு போரிட்டு வருகிறது.

Previous Post

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்

Next Post

திபப்பரே.கொம் கிண்ணத்தை புனித சூசையப்பர் சுவீகரித்தது

Next Post
திபப்பரே.கொம் கிண்ணத்தை புனித சூசையப்பர் சுவீகரித்தது

திபப்பரே.கொம் கிண்ணத்தை புனித சூசையப்பர் சுவீகரித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures