Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடு திரும்பும் இலங்கையர்கள் தங்கம் கொண்டு வருவதில் சிக்கலா..!

December 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

24 கரட் தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் குறிப்பாக 24 கரட் தங்கம் கடத்தப்படுவதை தடுக்கத் தேவையான சுற்றுநிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தங்கக் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 100,000,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுகிறது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டு வரப்படுகின்றமையே இதற்குக் காரணம்.

இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், இந்த தங்கக் கடத்தல்காரர்கள் ஒரு மாதத்தில் பாரியளவிலான பணத்தை மோசடி செய்து நாட்டுக்குள் தங்கத்தைக் கொண்டு வருகின்றனர்.

விரைவில் வெளியாகவுள்ள சுற்றுநிரூபங்கள்

நாடு திரும்பும் இலங்கையர்கள் தங்கம் கொண்டு வருவதில் சிக்கலா..! | Gold Smuggling To Sri Lanka

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 24 கரட் தங்கக் கடத்தலை தடுக்கத் தேவையான சுற்றுநிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.

எனினும், வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு இலங்கைக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் சட்ட ஏற்பாடுகள் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தங்க கடத்தல்காரர்கள் கொண்டு வந்த 40 கோடி ரூபாவுக்கு மேலான தங்கக் கையிருப்பு நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில் இது இரண்டாவது பெரிய தங்கச் சோதனையாகக் கருதப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Previous Post

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

Next Post

சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி

சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures