Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 | ஊசலாடுகிறது இலங்கையின் வாய்ப்பு

November 29, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 | ஊசலாடுகிறது இலங்கையின் வாய்ப்பு

Sri Lanka's Maheesh Theekshana (C) celebrates with teammates after taking the wicket of Afghanistan's Najibullah Zadran (not pictured) during the second one-day international (ODI) cricket match between Sri Lanka and Afghanistan at the Pallekele International Cricket Stadium in Kandy on November 27, 2022. (Photo by Ishara S. KODIKARA / AFP)

இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பங்குபற்றுவதற்கு ஆப்கானிஸ்தான் 7ஆவ து நாடாக நேரடி தகுதிபெற்றுக்கொண்டது.

இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டி மழையினால் கைவிடப்பட்டதை அடுத்தே ஆப்கானிஸ்தானுக்கு உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக பங்குபற்ற வாய்ப்பு கிடைத்தது.

அதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்றும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 208 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றிபெறக்கூடிய நிலையில் இருந்த இலங்கைக்கு இயற்கை அன்னை கைகொடுக்கவில்லை. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு 10 புள்ளிகள் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்தப் போட்டி முடிவுடன் இலங்கை 67 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 10ஆவது இடத்தில் இருக்கின்றது.

ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக்கில் இலங்கைக்கு இன்னும் 4 போட்டிகளே மிஞ்சி இருக்கிறது. அந்த நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் இலங்கை 8ஆம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், ஆப்கானிஸ்தானுடனான போட்டியைத் தொடர்ந்து இலங்கை அதன் கடைசி சுப்பர் லீக் தொடரில் நியூஸிலாந்தை 3 போட்டிகளில் அந் நாட்டில் சந்திக்கவேண்டியுள்ளது. நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொள்வது இலங்கைக்கு இலகுவாக அமையப்போவதில்லை.

தற்போது 88 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், 68 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருக்கும் அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது சுப்பர் லீக் போட்டிகளை நிறைவு செய்துவிட்டன. இந்த இரண்டு நாடுகளை முந்திக்கொண்டு 8ஆவது இடத்தை இலங்கை பெறவேண்டுமானால் இன்னும் 3 வேற்றிகளை ஈட்டவேண்டும். எனினும் தென் ஆபிரிக்காவிடம் இருந்து இலங்கை சவாலை எதிர்கொள்ள நேரிடும்.

தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 5 போட்டிகள் மீதமிருப்பதுடன் அந்த ஐந்து போட்டிகளும் தென் ஆபிரிக்காவிலேயே நடைபெறவுள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளிலும் நெதர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா விளையாடவுள்ளது.

தற்போது 59 புள்ளிகளுடன் 11ஆம் இடத்திலிருக்கும் தென் ஆபிரிக்கா எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 109 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு முன்னேறும்.

இலங்கை எஞ்சய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 107 புள்ளிகளை மாத்திரமே பெறும். எனவே இந்த இரண்டு அணிகளும் புள்ளிகளுக்கான நேரடி போட்டியை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் வரவேற்பு நாடு என்ற வகையில் இந்தியா இயல்பாகவே தகுதிபெற்றுவிட்டது.

இந்தியாவை விட இங்கிலாந்து (125 புள்ளிகள்), நியூஸிலாந்து (125), அவுஸ்திரேலியா (120), பங்ளாதேஷ் (120), பாகிஸ்தான் (120), ஆப்கானிஸ்தான் (115) ஆகிய 6 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

எட்டாவது நாடாக உலகக் கிண்ணப் போட்டியில் தகுதிபெறப்போகும் அணி எது என்பது அடுத்த வருடம் மார்ச் மாதம் தெரிந்துவிடும்.

அதன் பின்னர் சுப்பர் லீக் தொடர் முடிவில் 9ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடம்வரை 5 இடங்களை வகிக்கும் நாடுகள், இணை அங்கத்துவ நாடுகளுடன் தகுதிகாண் சுற்றில் விளையாடி அதில் முதல் 2 இடங்களைப் பெறும் நாடுகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

Previous Post

சேர்பியா – கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது

Next Post

நடிகர் ஜீவன் நடித்திருக்கும் ‘பாம்பாட்டம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
நடிகர் ஜீவன் நடித்திருக்கும் ‘பாம்பாட்டம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் ஜீவன் நடித்திருக்கும் 'பாம்பாட்டம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures