Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வியட்நாமிலுள்ள இலங்கையர்களை விரும்பினால் அழைத்துவருவோம் : அலி சப்ரி

November 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தற்காலிக மனிதாபிமான நிவாரணமே ஒரு இலட்சம் | நீதி அமைச்சர் சப்ரி

வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிங்கப்பூரில் இருந்து மீன்பிடிப் படகொன்றின் மூலம் சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு 303 இலங்கையர்கள் முயன்றிருந்த நிலையில் படகுக் கோளாறு காரணமாக தத்தளித்தவர்களை வியட்நாமிற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை நாட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தம்மை ஐ.நா.பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sabry tells Parliament some home truths – The Island

இவ்வாறான நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆபத்தான படகுப்பயணத்தில் பாதிக்கபட்டு வியட்நாமில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் மற்றும் விமானச் சீட்டுக்களை வழங்கி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுதிரும்ப மறுத்தால்?

எனினும் நாட்டில் காணப்படுகின்ற பொருளதார நெருக்கடிகளை மையப்படுத்தியே படகு மூலம் கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சிகளை குறித்த நபர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதை மறுப்பார்காளாக இருந்தால் அதன் பின்னர் சதேசச் சட்டங்களும் வியநட்நாமின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களும் தான் அவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்.

குறிப்பாக ஐ.நா.வின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உள்ளிட்ட தரப்பினரே தீர்மானங்களை எடுக்கவுள்ளனர் என்றார்.

Previous Post

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தினால் பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

Next Post
அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தினால் பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தினால் பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures