Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியாவில் தொங்குபாலம் அறுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

October 31, 2022
in News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
இந்தியாவில் தொங்குபாலம் அறுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

நேற்று (30) மாலை தொங்கு பாலம்  அறுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர்.

அந்த நேரத்தில் 400 பேர் குறித்த தொங்கு பாலத்தில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோர்பியில் வரலாற்று சின்னமாக பார்க்கப்பட்ட 765 அடி நீளம் கொண்ட இந்த தொங்கு பாலம், 1879  ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 

144 ஆண்டுகள் பழையான பாலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் பழுது பார்க்கும் பணியையும், புதுப்பிக்கும் பணியையும் மேற்கொண்டது.

இம் மாதம் ( அக்டோபர் 26 ) அன்று குஜராத் புத்தாண்டின் போது மக்கள் பயன்பாட்டுக்கு குறித்த பாலம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அறுந்து விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாநில அரசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் மோடியும், உயிரிழந்தவர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Previous Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

பல மாகாணங்களில் கனமழை பெய்யும்

Next Post
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

பல மாகாணங்களில் கனமழை பெய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures