போதைப்பாக்குடன் பாடசாலைக்கு சென்ற மாணவன் , தனது கையினை பிளேட்டால் வெட்டி காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர்.
அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்த போது , குறித்த மாணவன் தனது கையினை வெட்டி காயப்படுத்தி உள்ளார்.
காயத்திற்கு உள்ளன மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவனுக்கு எங்கிருந்து பாக்கு கிடைத்தது? பாடசாலைக்கு அருகில் யாரேனும் விற்பனை செய்கின்றார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.