Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதலில் 17 பேர் பலி

October 9, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதலில்  17 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரி ஜியா நகரில் ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தரை மட்டமானதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே கார்கீவ் பிராந்தியததில் ரஷிய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்டு உக்ரைன் ராணுவம் முயன்ற போது ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷியா ராணுவம் கூறும்போது, குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற வந்த உக்ரைன் ராணுவத்தின் அனைத்து தாக்குதல்களும் ரஷிய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. இதில் உக்ரைனின் 220 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 220 வீரர்கள் பலியானதை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.

2019-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதற்கிடையே ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.

பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தி உள்ளார்.

Previous Post

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட தயார் | மகிந்த ராஜபக்சே

Next Post

ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா காதல் உறுதி!

Next Post
ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா காதல் உறுதி!

ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா காதல் உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures