Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசாங்க ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

September 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

இலங்கையின்  மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்கள் உணவின்றி மயக்கமடைந்துள்ளதாக சில அதிகாரிகள் கூறியதை அடுத்தே சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு இது தொடர்பில் அரசாங்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரச பணியாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளிப்படுத்துவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மயக்கமடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் கூற்றுகளைத் தொடர்ந்து இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிராகரிக்கும் சுகாதார அமைச்சர்

அரசாங்க ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Sri Lanka Government Employee Government Staff

இந்தநிலையில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

அரசியல் உந்துதல் காரணமாகவே பொது சுகாதார ஊழியர்கள் நிலைமையை பெரிதுபடுத்துவதாக அவர் குற்றம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில், ஆறு மில்லியன் இலங்கையர்கள், அதாவது நாட்டின் சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், உணவு பாதுகாப்பற்றவர்கள் என்றும் அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என்றும் கூறியுள்ளமையை வெளிநாட்டு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

Previous Post

கோட்டாபயவை சந்தித்துள்ள சுப்ரமணியன் சுவாமி

Next Post

இனப்படுகொலை இடம்பெறவில்லை | பொன்சேகா

Next Post
யுத்தத்தின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை | சரத்பொன்சேகா

இனப்படுகொலை இடம்பெறவில்லை | பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures