Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எப்போது கிடைக்கும்

September 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எப்போது கிடைக்கும்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நிதி வழங்கிய நாடுகளுடனான சந்திப்பின்போது இலங்கை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய நாடுகளிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்கள் இன்னமும் கிடைக்காததால் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் உள்ளது இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் அளவு பல்வகை தன்மை, சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள், இலங்கைக்கு எதிர்காலத்தில் நிதி உதவி கிடைப்பதற்கான அவசியமான கடன்பேண்தகு நிலைமை குறித்து கடன் வழங்கிய நாடுகளிற்கு தெரியப்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர்,

இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த மத்திய வங்கி ஆளுநரும் திறைசேரி செயலாளரும் இலங்கை சமர்ப்பித்துள்ள திட்டத்திற்கு சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் சபை டிசம்பர் – 2023 ஜனவரிக்குள் அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் நவம்பருக்குள் பொது மற்றும் தனியார் கடன்கொடுப்பனவாளர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கடன் வழங்கியவர்களுடன் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பேச்சுவார்த்தைகள் அடுத்த வருடத்தின் இரண்டாவது காலாhண்டு வரை தொடரும் அதன் பின்னரே மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் சட்டபூர்வமாக செயல்படுத்தப்படும்.

Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

Next Post

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

Next Post
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures