Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜன பெரமுனவின் சிறைக்கைதியாகியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – குமார வெல்கம

September 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குமார வெல்கமவின் கட்சியில் சுசில். அர்ஜுண முக்கிய பதவிகளுக்கு பரிந்துரை


பொதுஜன பெரமுனவின் சிறைகைதியாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை சிறந்த முறையில் முழுமைப்படுத்த வேண்டுமாயின் ராஜபக்ஷர்களும்,பொதுஜன பெரமுனவும் அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைக்கிறோம் என புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள புதிய லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 37 இராஜாங்க அமைச்சுக்கான நியமனங்களை வழங்கியுள்ளார்.எதிர்வரும் ஓரிரு நாட்களில் இந்த எண்ணி;க்கைக்கமைய அமைச்சரவை அமைச்சுக்கான நியமனமும் இடம்பெறும்.

இராஜாங்க அமைச்சுக்கான வரபிரசாதங்களை பெற்றுக்கொள்ள போவதில்லை என இராஜாங்க அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை பெறுவார்கள்.

உறுப்பினர் பதவிக்கான சம்பளத்திற்கும்,இராஜங்க அமைச்சுக்கான சம்பளத்திற்கும் இடையில் 15,000 ரூபா மாத்திரமே வேறுப்பாடு.

37 இராஜாங்க அமைச்சர்களுக்கான வாகனம் மற்றும் அவர்களுக்கான சேவையாளர்கள்,சேவையாளர்களுக்கும் வசதிகள் என வசதிகள் விரிவடைந்து செல்லும்.நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் 37 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியம் தானா? இவர்களுக்கு நிதி ஒதுக்கவே அரச வருமானத்தில் பெருமளவிலான பகுதியை ஒதுக்க நேரிடும்.

அமைச்சரவை அமைச்சுகளுக்காக பிரதி அமைச்சு நியமனங்களும் இடம்பெறாம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயற்படுவார் என எதிர்பார்க்கவில்லை.சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டோம்,இருப்பினும் தற்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும்,சுதந்திர கட்சியின் ஒருசில உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விருப்பத்தின் பிரகாரம் செயற்பட முடியாத சிறை கைதியை போல் உள்ளார்.இடைக்கால வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தேன்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தினால் ராஜபக்ஷர்களும்,பொதுஜன பெரமுனவும் படுதோல்வியடையும்.

பாராளுமன்ற பலத்தை கைப்பற்றும் அரசியல் தரப்புடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சிறந்த முறையில் செயற்பட முடியும்.ஆகவே பொறுமையுடன் இருந்து பாராளுமன்றத்தை கலைப்பதே சிறந்த தீர்வாக அமையும் என்றார்.

Previous Post

இலங்கை வருகிறார் சமந்தா பவர் | பொருளாதார மீட்சிக்கான உதவிகள் குறித்து பலதரப்புப் பேச்சு

Next Post

ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் |  அமித்ஷா

Next Post
ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் |  அமித்ஷா

ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் |  அமித்ஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures