Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான்

September 9, 2022
in News, Sports
0
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் இலங்கையும் பாகிஸ்தானும் மீண்டும் சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும். 

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்ட போது 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை ஆசிய கிண்ணத்தை 5ஆவது தடவையாக சுவிகரித்திருந்தது.

50 ஓவர் கிரிக்கெட் வகையிலேயே இலங்கை 5 தடவைகளும் ஆசிய சம்பியனாகியிருந்தது.

2014ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை, அதே பங்களாதேஷ் மண்ணில் ஒரு மாதம் கடந்து இந்தியாவை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் ஆசிய கிண்ணத்தையும் உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்து இலங்கை வரலாறு படைக்கும் என இலங்கை இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண (இ20) கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை, 2ஆவது போட்டியில் பங்களாதேஷை 2 விக்கெட்களால் வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

சுப்பர் 4 சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை, ஆப்கானிஸ்தானை 4 விக்கெட்களாலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான இந்தியாவை 6 விக்கெட்களாலும் வெற்றிகொண்டது.

பாகிஸ்தானை சுப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில்.இலங்கை இன்றைய தினம் (9) சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியின் முடிவு இரண்டு அணிகளுக்கும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது போதிலும் இரண்டு அணிகளுக்கும் ஒத்திகை இறுதி ஆட்டமாக இது அமையவுள்ளது.

எனவே இரண்டு அணிகளும் தத்தமது பலத்தையும் பலவினத்தையும் இன்றைய போட்டியில் பரீட்சிக்கவுள்ளன.

இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறுவதால் நாணய சுழற்சி முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் (155 ஓட்டங்கள் – 2 அரைச் சதங்கள்), பெத்தும் நிஸ்ஸன்க (110 ஓட்டங்கள் – ஒரு அரைச் சதம்), பானுக்க ராஜபக்ஷ (96 ஓட்டங்கள்), அணித் தலைவர் தசுன் ஷானக்க (88 ஓட்டங்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் இன்றைய போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் இலங்கை வெற்றிபெறுவதற்கு துடுப்பாட்டத்தில் பெரும் பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கிண்ணத்தின் மூலம் சர்வதேச இருபது 20இல் அறிமுகமான டில்ஷான் மதுஷன்க 6 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்த வீரர்களுடன் ஏனைய இலங்கை வீரர்களும் தங்களது அதிகப்பட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி கடைசி இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பார்கள் என இரசிகர்கள் பெரிதும் எதர்பார்க்கின்றனர்.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணியிலும் அதிசிறந்த வீரர்கள் இருக்கின்றனர்.

இந்த சுற்றுப் போட்டியில் அபாராமாகத் துடுப்பெடுத்தாடி வரும் மொஹமத் ரிஸ்வான் 2 அரைச் சதங்களுடன் 212 ஓட்டங்களை மொத்தமாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச இருபது 20 துடுப்பாட்ட வரிசையில் பாபர் அஸாமை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பக்கார் ஸமான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 83 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் பக்கார் ஸமான் (8 விக்கெட்கள்). ஷதாப் கான் (7 விக்கெட்கள்), நசீம் ஷா (6 விக்கெட்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Previous Post

தமிழ் தரப்புகள் பொது உடன்பாட்டுக்கு வந்து பொதுசன வாக்கெடுப்பை முன்வைக்க வேண்டும் | எம்.கே சிவாஜிலிங்கம்

Next Post

10 மணித்தியால மின்சார தடை! இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு

Next Post
10 மணித்தியால மின்சார தடை! இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு

10 மணித்தியால மின்சார தடை! இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures