Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்களின் சேமிப்பில் 70 வீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளனர் | ஹர்ஷ

September 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சீன கப்பல் விவகாரத்தில் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும் | ஹர்ஷ டி சில்வா

நாட்டு மக்களின் சேமிப்பில் 70சதவீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பதில் எவ்வித தவறும் கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ராஜபக்ஷர்களும் நாட்டை நிர்மூலமாக்கியுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் கைதியாக சிறைப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கை காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டதற்கு ஒப்பானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு-செலவு திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் பேர்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எக்காலத்திலும் இலங்கையை போன்று பங்களாதேஷை வீழ்ச்சியடைய செய்ய போவதில்லை என பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் சேக் ஹசீனா குறிப்பிட்டுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது.இலங்கையை விட பொருளாதார மட்டத்தில் பின்னணியில் இருந்த பங்களாதேஷ் தற்போது இலங்கைக்கு கடன் வழங்கும் அளவிற்கு சடுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.

பங்களாதேஷ் நாடு மாத்திரமல்ல வலய நாடுகள் பல எம்மை விட முன்னேறி செல்கின்றன.1995ஆம் ஆண்டு ஆடைத்தொழிற்துறையை தொடர்ந்து இலங்கையும்,வியட்நாம் நாடும் வருடத்திற்கு மூன்றரை பில்லியன் பண்டங்களை ஏற்றுமதி செய்தன.

2021ஆம் ஆண்டு இலங்கை பன்னிரென்டரை பில்லியன் பண்டங்கள் ஏற்றுமதி செய்யும் போது வியட்னாம் மூந்நூற்றைம்பது டொலர் பில்லியன் பண்டங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நாட்டு தலைவர்கள் உலகிற்கு ஏற்றாட்போல் தமது நாடுகளை மாற்றியமைத்துள்ளார்கள்.நாடு முழுவதும் வரி வேலி அமைக்கப்பட்டது, பொய்யான வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.பொய்யான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு இனவாதத்தை தோற்றவித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு நிலைப்படுத்தியுள்ளார்கள்.

வாழ முடியாத சூழலை மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.அரசாங்கத்தின் தரப்படுத்தலுக்கமைய கடந்த மாதம் உணவு பணவீக்கம் 80 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பாண் ஒரு இறாத்தலின் விலை 300 ரூபாவை எட்டும்.நாட்டு மக்களின் சேமிப்பில் 70 சதவீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்று குறிப்பிடுவது தவறொன்றுமில்லை.அதுவே உண்மை.

நாடு மரணத்தின் அருகில் உள்ளது. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் தான் நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணித்துள்ளார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளிநாட்டில் ஹோட்டலில் அடைப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ராஜபக்ஷர்களும் நாட்டை நிர்மூலமாக்கிவிட்டார்கள் என்பதை நாட்டு மக்கள் அச்சமில்லாமல் குறிப்பிடுகிறார்கள்.

ராஜபக்ஷர்களின் தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி, மக்களாணையினை திரிபுப்படுத்தியுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு –செலவு திட்டம் ஒரு ஆவணம் மாத்திரமே.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ முன்வைத்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் திருத்தம் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை பெரிதாக விளக்கப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.பொருளாதார மீட்சிக்கான நாங்கள் முன்வைத்த 10 விடயங்களை உள்ளடக்கிய கொள்கை திட்டத்திற்கமையவே தற்போதைய இடைக்கால வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலக நடப்பிற்கேற்ப பொருளாதார கொள்கை திட்டத்தை ஜனாதிபதி காலம் காலமாக முன்வைக்கிறார்.ஆனால் அதனை செயற்படுத்த ராஜபக்ஷர்கள் இடமளிப்பதில்லை.நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.தற்போதும் அதன் தொடர்ச்சியே காணப்படுகிறது.

போராட்டகாரர்கள் மீது வன்முறையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.பயங்கரவாத தடைச்சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது.நாட்டின் தற்போதைய ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜெனிவாவில் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.பொதுஜன பெரமுனவின் கைதியாகவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையினை செயற்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கை காகத்தின் கூட்;டில் குயில் முட்டையிட்டதை போலாகும்.நாம் பாரிய நெருக்கடியில் உள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் இருப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது.பொருளாhதார மீட்சிக்கான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தின் ஊடாக வழங்குவோம் என்றார்.

Previous Post

5 மாகாணங்களில் இன்று அதிக மழை பெய்யும்

Next Post

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

Next Post
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு - செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures