முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.