Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது

August 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் மொத்த விலை குறைந்துள்ளது.

புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, செத்தல் மிளகாய், வெங்காயம் போன்ற இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை இன்றும் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய விலைப் பட்டியல்..

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை 430 முதல் 450 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் அரிசிகளான பொன்னி சம்பா, வெள்ளை பச்சை, சிவப்பு பச்சை போன்றவற்றின் மொத்த விலை 170 முதல் 190 ரூபா வரை உள்ளது.

புறக்கோட்டை மொத்த விற்பனை கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 160 ரூபா மற்றும் 165 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 முதல் 150 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் மொத்த விலை 1350 முதல் 1500 ரூபா வரையிலும் உள்ளது.

இருப்பினும், புறக்கோட்டையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை அதிகமாக உள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களினால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ வசூலில் வெற்றியை பெறுமா

Next Post

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருடன் எந்த தொடர்புமில்லை | ஈரான்

Next Post
சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருடன் எந்த தொடர்புமில்லை | ஈரான்

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருடன் எந்த தொடர்புமில்லை | ஈரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures