Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு | ரணில் 

August 14, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும் ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகை பெரஹரவின் நிறைவு நாளான நேற்று வெள்ளிக்கிழமை  (12) கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

பெருமைமிக்க பொறுப்பினை நிறைவேற்றியுள்ளமைக்கு முதலில் கண்டி தியவடன நிலமேவிற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டு வருட காலத்திற்கு பின்னரே கண்டி தலதா மாளிகை பெரஹராவை வெகுவிமர்சையாக நடத்த முடிந்தது.

கண்டி தலதா மாளிகை பெரஹரவில் சகல மதத்தவர்களும் கலந்துக்கொள்வார்கள்.இலங்கையின் சம்பிரதாயத்தின் ஒரு பகுதியாகவே கண்டி பெரஹர இடம்பெறுகிறது.நாட்டை பாதுகாப்பது பிரதான வேண்டுதலாக காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள சூழ்நிலையில் கண்டி பெரஹர இடம்பெறுவது கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.நெருக்கடியான சூழல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.இதனை விட சவால்மிக்க காலம் தோற்றம் பெற முடியும்.

சகல சவால்கமில் இருந்தும் மீண்டெழ வேண்டும்.சிறந்த கொள்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.தலதா மாளிகை உட்பட நாட்டின் சகல மதங்களில் செயற்பாடுகளும் எமக்கு ஆசிர்வாதத்தை முழுமையாக வழங்கும் என்பதை நம்புகிறேன்.

அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும் ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Previous Post

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி : மொரகஸ்முல்லை கழகத்தை எதிர்த்தாடுகிறது பொலிஸ் கழகம்

Next Post

ஜெனீவாவை எதிர்கொள்ள அரசாங்கம் விசேட பொறிமுறை | நீதி அமைச்சர் விஜயதாச

Next Post
சகல நிலைமைகளும் கைமீறிவிட்டன | ஜனாதிபதியிடம் தீர்வுக்கான தீர்மானம் | ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ

ஜெனீவாவை எதிர்கொள்ள அரசாங்கம் விசேட பொறிமுறை | நீதி அமைச்சர் விஜயதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures