Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் போராட்டம் முடிந்துவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது | சரத் பொன்சேகா

August 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மக்கள் போராட்டம் முடிந்துவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது | சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவான போது தப்பி ஓடியவர்கள் இப்போது நாங்கள் மீண்டும் வருவோம் என்று மக்களுக்கு சவால் விடுகின்றனர். மக்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை. இன்னும் சிறிது காலத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் உரையில் ஊழல் தொடர்பில் கடுமையாக எதனையும் கூறவில்லை. நாட்டில் ஊழல் இருப்பதாக மக்களிடையே கதைக்கப்படுவதாக மட்டுமே கூறியுள்ளார். அதேபோன்று பொய்களை சோடிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இப்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மிகவும் பாரதூரமானது. ஊழல் மிக்க ராஜபக்‌ஷக்களிநாலும் , அவரை சுற்றியிருந்த ஊழல் மிக்க அதிகாரிகளாலுமே நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் இன்னும் நிதி மோசடி நடக்கின்றது. எரிவாயு கப்பல் வரும் வரையில் மக்கள் காத்திருந்தனர். இதன்படி கடனை பெற்று அந்தக் கப்பலை கொண்டு வந்தனர். அதன்போது மெற்றிக் டொன் எரிவாயுக்கு அதிகளவில் டொலர் செலுத்தப்பட்டது. அதனால் 136 கோடி ரூபாவை இழக்க நேரிட்டுள்ளது.

இன்னும் ஊழல் நிறுத்தப்படவில்லை. இப்போது பதவிகள் வழங்கப்படுகின்றன. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவற்றை வழங்குகின்றனர். வாகனங்கள், அலுவலகங்கள் என்பன மக்களின் பணத்திலேயே வழங்கப்படுகின்றன.

இந்த அரசாங்கமும் ராஜபக்ஷ்வினர்களும் எமது உயிரை மாத்திரமன்றி பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சீரழித்துள்ளனர். யுத்தக் காலத்தில் கூட இதுபோன்ற நிலைமை இருக்கவில்லை. அப்போது பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போனார்கள். போக்குவரத்துக்கள் இருந்தன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ராஜபக்ஷ் ஆட்சி பொறுப்பு கூற வேண்டும். மக்களை ஏமாற்றியமையே இதற்கு காரணம்.

அத்துடன் காஸ் வரிசை தற்போது குறைவடைந்துள்ளது. இந்தியாவிடமிருந்து கடனுக்கே அதனை பெற்றுக்கொண்டுள்ளது. மாறாக எமது வருமானத்தில் பெற்றுக்கொள்ளப்படவி்லலை. எரிபொருள் வரிசை இல்லை . ஆனால் மக்களுக்கு தேவையான எரிபொருள் இல்லை. நாட்டில் சிறந்த ஆட்சி ஒன்றை ஏற்படுத்தவே இளைஞர்கள் வீதிக்கிறங்கினர்.

அவர்களின் போராட்டம் காரணமாகவே அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் இந்த போராட்டக்கார்களுடன் மக்கள் இருக்கவேண்டும். போராட்டக்காரர்களை கைதுசெய்வதை, அடக்குவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியாகிவிட்டாலும் அவர்களின் போராட்டம் உள்ளத்தில் இருக்கின்றது. அதனால் போராட்டம் முடிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம். அவர்கள் மீண்டும் வேறு முறைகளில் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவான போது தப்பி ஓடியவர்கள் இப்போது நாங்கள் மீண்டும் வருவோம் என்று மக்களுக்கு சவால் விடுகின்றனர். மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதனால் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Previous Post

‘அரகலய’ வெற்றிபெற்ற அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் பெற்றிபெறாதது ஏன்? | அம்பிகா

Next Post

அபுதாபியில் கைதான புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ரி.ஐ.டி.

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

அபுதாபியில் கைதான புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் - விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ரி.ஐ.டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

Recent News

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures